Wednesday 3 February 2021

வரம் ஒன்று தந்தருள்வாய்

 வரம் ஒன்று தந்தருள்வாய்! வடிவேலா!                                                                         வரமொன்று தந்தருள்வாய்! --எங்கள்                                                     

மரகத மாமயிலேறும் ஆறுமுக வடிவேலா         (வரமொன்று)

அனுபல்லவி
பரம்” என்ற சொல்லுக்கொரு பொருளே! --பரத்தில்                                     பரம் என்ற சொல்லுக்கொரு பொருளே!---இளம்                                          பச்சைக்கும் இச்சைக்கும் நடுப் பொருளே!                                                 
பல பொருள் கேட்டுனை அது இது எனாது                                                                 
பட்டென்று ஒரு பொருள் கேட்டிடுவேன் அந்த       (வரமொன்று)

சரணம்
பொன்னும் மணியும் எந்தன் புத்தியிலே பட்டவை--                                        புளித்துப் புளித்துப் போச்சே!--- ஏனென்றால் உந்தன்                                     புன்னகை முகம் கண்டதால் ஆச்சே!
இன்னும் உலகமுறும் இன்பம் என்றவை---                                                                   
எப்படியோ மறந்து போச்சே! ஏனென்றால் உன்                                               ஏறுமயில் நடம் கண்டதாலாச்சே!
முன்னும் மனம் உருக முருகா முருகா” என்று                                                          மோஹமீறித் தலை சுற்றலாச்சே!-- சொல்ல வந்த                                                   
மொழி கூட மறந்துதான் போச்சே!
பொன்னார் மேனியன் காதில் சொன்னாயே (ஏதோ)--அந்தரங்கம்                                      போதும் என்று கேட்கவும் ஆசை ஆச்சே

மத்யம காலம்
புனிதமான அறுபடை வீடுடையாய்!  புகு மதக்களிறு நடையுடையாய்!
இனித்த நறு வைங்கலவை அதனினும்-- இனித்த தினையினைச் சுவையுடையாய்!
எனக்கும் ஒரு பதம் தந்தருள மணமணக்க வரு  தமிழருளுடையாய்
அன்னையினும் சிறந்ததான அருளொடு நிறைந்ததான அறுமுக வடிவேலா
(வரமொன்று)

No comments:

Post a Comment