Thursday 25 March 2021

என்னகவி..ராகம்

என்ன தமிழ் பாடினாலும்

எந்தன் மனம் நிறையவில்லை

ஈடில்லா தெய்வம் காஞ்சி

சங்கரன் வடிவில் உன்னை

(என்ன தமிழ்....)


நீருள்ள வரைதனிலே பூ மணக்கும் - தேவா

நீயிருந்து காத்திடவே புவி என்றும் பிழைத்திருக்கும்

(என்ன தமிழ்...)


கதியென உனையன்றி ஏதுண்டு தரணியிலே

அற்புதம் அருள்வாய் நீயே - விஜயேந்திரரே

பக்தரை காத்தருள்வாயே

(கதியென...)


வடிவான நங்கையுடனே நாதியனாம் சிவப்பொருளாய்

ஞாலமிதை காப்பாய் நீயே - ஜகதீஸ்வரரே

நேயமொடு அருள்வாய் நீயே

(வடிவான...)


பொற்பதமும் பற்றித் தொழுதேன்

புனிதமும் பெறவேண்டி

மங்களம் அருள்வாய் நீயே - சர்வேஸ்வரரே

என் குலம் காத்தருள்வாய்

(என்ன தமிழ் ...)


Thursday 4 March 2021

முருகன் பஜன்


ஈசனோடு பேசியது போதுமே

என்னோடும் பேசு சாமிநாதா

ஈசனோடு பேசியது போதுமே
என்னோடும் பேசுசாமி நாதனே
ஆசையோடு தமிழெடுத்துப் பாடினேன்
ஐயாஉன் திருவடியை நாடினேன்

கண்சீறும் பொறியூறி பிறந்தவா
கமலத்தில் அன்று நீயும் தவழ்ந்தவா
தண்ணீரில் சளியுனக்குப் பிடிக்குமே
சரவணத்துப் பொய்கைவிட்டு எழுந்துவா

கடலோரம் நிற்பவனே சண்முகா
கடல் நீரால் உடல் அரிக்கும் அல்லவா
நடமாடும் மயிலேறி இங்குவா
நல்ல மனக் கோயிலுண்டு தங்கவா

குன்றத்திலே கல்யாணம் ஆனதால்
குவலயத்தை நீமறத்தால் நியாயமா
குன்றத்தையும் விட்டிறங்கி ஓடிவா
கொஞ்சு தமிழ் இசைகேட்டு ஆடிவா

பன்னிரண்டு கண்களாடுந் தெய்வமே
என்னை மட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்

ஒன்றிரண்டு விழியேனும் திறந்திடு
ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு
என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு
ஏற்றமுடன் யான் வாழ வரங்கொடு.


தினம்தினம் முருகனையே நினை மனமே-நம்

கஷ்டங்களைப்போக்கிடுவான் நம்பு மனமே


பக்தியுடன் பாட வேண்டும் நினை மனமே

பரவசமாய் ஆட வேண்டும் நினை மனமே


பழனிமலை பாலனையே நினை மனமே

சவாமிமலை நாதனையே நினை மனமே

எட்டுக்குடி வேலனையே நினை மனமே

சிக்கல் சிங்காரனையே நினை மனமே (தினம்)


திருப்போரூர் குமரனையே நினை மனமே

திருச்செந்தூர் முருகனையே நினை மனமே

திருத்தணிகை ஈசனையே நினைமனமே

வள்ளிமலை வாசனையே நினைமனமே (தினம்)

______________




Velava Velava Vel Muruga Vaa Vaa


Velava Velava Vel Muruga Vaa Vaa 

Vel Muruga Vaa Vaa Vadi Vel Muruga Vaa Vaa

Velava Shanmukha Muruga Muruga


Valli Manavala Kunjari Manala

Deva Kunjari Manala

Vanna Mayil Vahana Muruga Muruga


Sooradhi Soora Subramanya Deva

Deva Subramanya Deva

Shanmukha Saravana Muruga Muruga

__________

பஜனை பாடல்கள்

வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா

சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா ராதாரமணா 
பக்தர்களில் குறைதீர்க்கும் ஸ்ரீரங்கா ரதராமணா | |
வனமாலி...

வெண்ணனையுண்ட மாயவனே கண்ணா நீ ராதாரமணா 
வேண்டும்வரம் தந்திடுவாய் ஸ்ரீரங்கா ராதாரமணா  | |
ராதா ரமணா
வனமாலி..
___________
ரகுபதி ராகவ ராஜாராம் !  பதீத பாவன சீதாராம் !
ஈஸ்வர அல்லா தேரே நாம் ! சப்கோ சன்மதி தே பகவான் !
ராம ராம ஜய ராஜா ராம்..
ராம ராம ஜய சீதாராம்..
________
சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா வா
வண்ண வண்ண உடை உடுத்தி கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா…(சின்ன)

மல்லிகை முல்லை மலராலே அர்சணை செய்வோம் வா வா வா
மாதவனே கேசவனே யாதவனே நீ வா வா வா…(சின்ன)

திரௌபதி மானம் காத்தவனே தீனஸரண்யா வா வா வா
காலமெல்லம் உன் அருளை வேண்டுகிறொம் நீ வா வா வா…(சின்ன)

கண்ணில் தெரியும் காட்சியெல்லம் கமலக்கண்ணா உன்தொற்றம்
கண்ணழகா மணிவண்ணா கண்ணா நீ வா வா வா…(சின்ன)
_________________
வாவா முருகையா..வடிவேல் அழகா..வாவாவா குமரா
திருக்கார்த்திகேயா..(வாவா)

சிங்கார வேலா..சிவசக்திபாலா
சங்கீத லோலா
ஹேசுவாமிநாதா
வாவா முருகா வடிவேல் அழகா
____________

வருவாய் வருவாய் வருவாய் அம்மா..திருவே உருவாய் வருவாய் அம்மா..(2)

கல்யாணி கருமாரி காமாட்சி நீயே..
மகாலக்ஷ்மி மாதங்கி மீனாக்ஷி நீயே..
வரலக்ஷ்மி வாராஹி விசாலாட்சி நீயே..
உலகாளும் மாயே..மகமாயி தாயே..
அம்மா அம்மா அம்மா அம்மா(2)

கோவிந்த கிருஷ்ணா..ஸ்ரீஹரி கோபால கிருஷ்ணா
பாண்டுரங்க கிருஷ்ணா..ஸ்ரீஹரி பண்டரிபுர கிருஷ்ணா

கோ.ராதே..ஸ்ரீஹரி கோபால...

கோ.கண்ணா..ஸ்ரீஹரி

கோ.விட்டல்..ஸ்ரீஹரி

Velava Velava Vel Muruga Vaa Vaa

Velava Velava Vel Muruga Vaa Vaa 
Vel Muruga Vaa Vaa Vadi Vel Muruga Vaa Vaa
Velava Shanmukha Muruga Muruga

Valli Manavala Kunjari Manala
Deva Kunjari Manala
Vanna Mayil Vahana Muruga Muruga

Sooradhi Soora Subramanya Deva
Deva Subramanya Deva
Shanmukha Saravana Muruga Muruga
__________

கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
மதுசூதனா கோகுலேந்திரா
எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)

காயத்தினை நொந்து கர்மம் கசந்துபின்
கதியினை தேடத்தகாதே
அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
சாகும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் 
பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)

கண்ணால் அவன் உருநாடு - இரு
கண்ணால் அவன் உருநாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் அடஒன்று ஆடு - அந்த
காலன் வந்தால் என்ன நேரில் அவன்
கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)

நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போபோ
நேரம் எனக்கேது இப்போ
எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ

நேரத்தகும் என்று சொல்லு இந்த
நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
கோடி கொடுத்தாலும்
பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)

பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
போடக் கிடைத்த கை இரண்டு
இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
சொன்னால் கொள்ளை தான் போகாதே
ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)

கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலங்கள் கோளங்கள் அவை
இவை என்று சொல்லி
காலனின் வசப்படாதே - கொடும்
காலனின் வசப்படாதே (கோவிந்த)

பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
பாடி கிடைந்திட்ட போதே
நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)

காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிப்பது சத்தங்கம்
இங்கு வேண்டிய அருள் பொங்கும்
நிகரில்லை என்றெங்கும் தங்கும்
கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)

பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
பாரில் இல்லை ஆதலாலே
நாடறியச் சொல்லு மேலே
நாமணக்க பாடும் போலே
கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
_________
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா

போலோ நாத உமாபதே
சம்போ சங்கர பசுபதே
நந்தி வாகன நாக பூஷண
சந்திரசேகர ஜடாதரா
கங்காதார கௌரி மனோகர
கிரிஜா ரமணா சதாசிவா  (போலோ)

கைலாசவாசா கனகசபேசா
கௌரி மனோகர விஸ்வேசா
ஸ்மாசன வாஸா சிதம்பரேசா
நீலகண்ட மஹாதேவா  (போலோ)

சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசா
விபூதி சுந்தர பரமேசா
பம் பம் பம் பம் டமருகநாத
பார்வதி ரமணா சதாசிவா  (போலோ)
___________
கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே..
__________
தசரத நந்தன ராமராம்
ஜய தசமுக மர்தன...
பசுபதி ரஞ்சன..
ஜய பாப விமோசன...
மணிமய பூஷண...மஞ்சுள பாஷண...ரணஜய ரக்ஷக ...
ராக்ஷஸ காசக ராமராம்
__________

சித்த சோரா யசோதாகே லால்
நவநீத சோர கோபால்..(2)
கோபால் கோபால் கோபால் கோபால்
கோவர்த்தன தர கோபால்..

ஹரிநாராயண கோவிந்தா 
ஜெயநாராயண கோவிந்தா 
ஹரிநாராயண ஜெயநாராயண 
ஹரிகோவிந்தா கோவிந்தா.

பக்த ஜனப்ரிய கோவிந்தா 
பங்கஜ லோசன கோவிந்தா 
பக்தஜனப்ரிபங்கஜலோசன
பரமானந்தா கோவிந்தா.

தசரதநந்தன கோவிந்தா 
தசமுகமர்த்தன கோவிந்தா 
தசரதநந்தனதசமுகமர்த்தன
சதமகஸேவித கோவிந்தா.

கமலா வல்லப கோவிந்த
கமல விலோசனகோவிந்தா 
கமலா வல்லப
கமலவிலோசன
கலிமலநாசன கோவிந்தா
_____

தினம்தினம் முருகனையே நினை மனமே-நம்
கஷ்டங்களைப்போக்கிடுவான் நம்பு மனமே

பக்தியுடன் பாட வேண்டும் நினை மனமே
பரவசமாய் ஆட வேண்டும் நினை மனமே

பழனிமலை பாலனையே நினை மனமே
சவாமிமலை நாதனையே நினை மனமே
எட்டுக்குடி வேலனையே நினை மனமே
சிக்கல் சிங்காரனையே நினை மனமே (தினம்)

திருப்போரூர் குமரனையே நினை மனமே
திருச்செந்தூர் முருகனையே நினை மனமே
திருத்தணிகை ஈசனையே நினைமனமே
வள்ளிமலை வாசனையே நினைமனமே (தினம்)

கண்ணன் பஜன்

 


யசோதை:

மாடு மேய்க்கும் கண்ணே நீ

போக வேண்டாம் சொன்னேன்

கண்ணன்:

போக வேணும் தாயே

தடை சொல்லாதே நீயே


காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்

கை நிறைய வெண்ணைய் தரேன்;வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 


காய்ச்சின பாலும் வேண்டாம்;கல்கண்டுச் சீனி வேண்டாம்

உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 


யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்

கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே 

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 


கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ?கண்டதுண்டோ சொல்லும் அம்மா?

கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன் 

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 


கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு

கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே 

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 


காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்

கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 


பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்

என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே 

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 


பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்

தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன் 

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)


நாமாவளிகள்

கோவிந்தா ஹரி கோவிந்தா

கோகுல நந்தன கோவிந்தா

ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா

போலோ நாத உமாபதே
சம்போ சங்கர பசுபதே
நந்தி வாகன நாக பூஷண
சந்திரசேகர ஜடாதரா
கங்காதார கௌரி மனோகர
கிரிஜா ரமணா சதாசிவா  (போலோ)

கைலாசவாசா கனகசபேசா
கௌரி மனோகர விஸ்வேசா
ஸ்மாசன வாஸா சிதம்பரேசா
நீலகண்ட மஹாதேவா  (போலோ)

சூலாதாரா ஜ்யோதிப் பிரகாசா
விபூதி சுந்தர பரமேசா
பம் பம் பம் பம் டமருகநாத
பார்வதி ரமணா சதாசிவா  (போலோ)
___________
கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயணா ஹரே
அச்சுதானந்த கோவிந்த மாதவா
சச்சிதானந்த நாராயணா ஹரே.._

_____

அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி

ஆதி பராசக்தி பாலயமாம் (x2)


திரிபுரசுந்தரி ராஜராஜேஷ்வரி

திருபுவனேஸ்வரி பாலயமாம்

அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி

ஆதி பராசக்தி பாலயமாம்


காஞ்சி காமாக்ஷி மதுரை மீனாக்ஷி

காசி விசாலாக்ஷி பாலயமாம்

அம்ப பரமேஸ்வரி அகிலாண்டேஸ்வரி

ஆதி பராசக்தி பாலயமாம் 


ஜெய ஆதி பராசக்தி பாலயமாம் ….(x2)

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர...

 

சுட்டும் விழிச் சுடரே - சங்கரா 

சுந்தரப் புன்னகையே 

விட்ட வழி நினதே – எமக்கு 

சுகமருட் சுந்தரனே 

கட்டும் விதிவலியை கலைந்தே 

காத்தருள் புரிகுவையோ 

நட்ட நடு வாழ்வாம் கடலில் 

கரையேற் றருள் குருவே! 


காலைக் கதிரொளியோ – சங்கரா 

கருணை பொழிமுகமோ 

மேலைக் கடலொலியாய் மனமும் 

ஏங்கித் தவிக்குதையா 

தாளைப் பற்றினமே – எமக்கு 

தன்னொளி புரிகுவையோ 

சோலை மலர் மணமாய் வாழ்வில் 

சுகமதும் தந்தருளே! 


மோனத் தவ உருவே – சங்கரா 

மூத்தோர் திருவுருவோ 

ஞானக் கடல் ஒளியாய் ஞாலம் 

காக்கவும் வந்தனையோ 

கானம் இசைத்து முன்னை நாளும் 

கண்டு துத்தனமே 

தானம் தரும வளம் தரணியில் 

தழைத்திட அருள் குருவே!

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர...

 

குஞ்சித சங்கரத் திருவுரு கண்டால்

துயர்தரும் ரோகமும் விலகிடுதே

குவலய வாழ்விதும் விளங்கிடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(1)


செகம்புகழ் மேனியன் தவவுரு கண்டால்

பிழறாப் புண்ணியம் கூடிடுதே

பரமானந்தம் நிறைந்திடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(2)


அகமகிழ் வரமருள் குருவுரு கண்டால்

மனமகிழ் வென்றும் நிலைபெறுதே

மனமதில் தருமமும் நிறைந்திடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(3)


துளசியும் வில்வமும் தவழ்வுரு கண்டால்

தரணியில் நெறிபல வளம்பெறுதே

தன்னொளி கூடியும் திகழ்ந்திடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(4)


சசிசேகர குரு திகழுரு கண்டால்

சங்கடம் யாவையும் அகன்றிடுதே

சன்மார்க்கம் மனம் உணர்ந்திடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(5)


பரவொளி படரொளி திருவுரு கண்டால்

பக்தியும் நெஞ்சினில் பெறுகிடுதே

பண்பட வாழ்வும் உயர்ந்திடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(6)


வலக்கரம் வாழ்த்தும் வகையுரு கண்டால்

வந்தனம் செய்மனம் மகிழ்ந்திடுதே

வாழ்வினில் இன்பமும் கூடிடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(7)


எளிமையும் சாந்தமும் எழிலுரு கண்டால்

ஏக்கமும் தீர்ந்தருள் கூடிடுதே

ஏழ்மையும் தீமையும் விலகிடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(8)


பங்கஜ பார்கவி திகழுரு கண்டால்

காமாக்ஷி அருள் ஒளிதருதே

கருணையும் வாழ்விதைக் காத்திடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(9)


சங்கர சன்னதி திருவுரு கண்டால்

சங்கர கோஷமும் பெறுகிடுதே

சந்ததம் நெஞ்சினைத் தூய்த்திடுதெர்

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(10)


அருட்கடல் அயராத் தவவுரு கண்டால்

தமிழொலி எங்கிலும் பரவிடுதே

தவமாய் கோஷமும் விளங்கிடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுமே

(11)


சிவகுரு நந்தனத் திருவுரு கண்டால்

சித்தமும் தூய்ந்தெழில் பெற்றிடுதே

திவ்வியன் திருவருள் காத்திடுதே

ஜகத்குரு திருப்பதம் சரண்புகுந்தாலே

செகமிதில் வாழ்நிலை உயர்ந்திடுதே

(12)


Monday 1 March 2021

சங்கர கீதம்

 "சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


சத்திய மிவரைச் சிந்தனை செய்தால் 

சகலமும் நடந்திடும் சடுதியிலே! 

சித்தமுந் தூயுறு பத்தியும் செய்தால் 

சங்கடம் தீர்ந்திடும் வாழ்வினிலே! 

(1) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


அம்பர மாடிடும் ஆடவல் லானருள் 

அஞ்சுக மேற்றிடும் வாழ்வினிலே! 

அம்பல மோடியு மஞ்சுகத் தாளதைக் 

கண்டிட மங்களம் ஓங்கிடுமே! 

(2) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


மும்மல மாயை மதிகெடு இருளும் 

மன்னவன் வரமும் தீர்த்திடுமே! 

பூதல மாமகன் பொன்னுரு கண்டிட 

பூவுல கெங்கிலும் மகிழ்ந்திடுமே! 

(3) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


மா’தவ மானுட தெய்வமு மிங்கே 

ஆறுதல் தந்திட வந்ததுவே! 

ஆதவன் அருளென ஞானமுந் தந்திட 

மா’குரு மந்திரம் போற்றுவமே! 

(4) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


சாதியும் பேதமு மேதுமிலா தொரு 

சங்கர சன்னதி நாடுவமே! 

நாதியும் நற்கதி யாகவு மேவிடும் 

சசிசேகர பதம் போற்றுவமே! 

(5) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


வாரண மாயிர மொளியரு ளாசியும் 

செகத்குரு சங்கரன் தந்திடவே 

காரண காரியம் யாவிலும் வெற்றியும் 

கூடிட வாழ்வினில் ஓங்குவமே! 

(6) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


நானென தின்றி தானது மின்றி 

சாதகம் புரிதல் நன்றாமே! 

நாதனுன் நாமம் நாவினில் பரவிட 

நாயகமே அருள் புரிவாயே! 

(7) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்" 


சேயென துள்ளம் தாய்நீ யறிவாய் 

சோர்வதும் நீங்கிட சுகமருள்வாய்! 

பார்திகழ் காஞ்சியின் பேரிறை பரமே 

பவவினை நீங்கிட அருள்வாயே! 

(8) 


"சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம் 

சந்த்ரசேகரா சந்த்ரசேகரா சந்த்ரசேகரா நமஸ்காரம்"

சங்கர கீதம்

 

  மந்திர முதல்வனை மங்கல வுருதனை 

        சத்சிவ புதல்வனை ….. அடிபேணி 


முப்புர மெரித்தவ னற்புத மனையவள் 

        புத்திர  மதியொளி ……. அருள்கூடி 


சித்தமு மொளிபட சிந்தையி லுருவகை 

        செப்பிடு வருட்புகழ் …. இதனூடே 


சித்துரு சிவபுரச் சங்கர கழநிழல் 

        பற்றிட வழகுற ….. மனதார 


இச்செக முறநெறி நற்திற முடனுரை 

        செப்பிய முனிவனின்…. புகழ்பாட 


செப்பிடு குருப்புகழ் சத்திய மொழியதில் 

        நித்தமு மெழுதிட …… வழிதாராய்!


பித்தமுள் ளெம்மனம்  போற்றிடு வகையென 

        சித்தமுஞ் சீர்படு ….. மொளிகூட 


முத்தமிழ் அழகனின் முத்திரை யுடையவ 

        ரொற்றியு மெழுதிட ….. அருள்வாயே!


சங்கர கீதம்

 

என்னென்று சொல்லி யான் புலம்புவேன் - என் ஈசா

ஏகம்பத் தலம் மேவும் எந்தை சசிசேகரா


(என்னென்று...)


சொல்லொனாத் துயர்களும் சோகத்துச் சுமைகளும்

சுகமிலா நிலைதன்னில் சோர்வுகொள் நிலைதனை


(என்னென்று...)


வாடிடும் நெஞ்சத்தில் தளிரருள் புரிந்து நீ

வாஞ்சை யோடண்டிடும் வளர்நிலை பெறுவேனோ


நாடியே நலம்பெற நத்தித் தொழுகின்றேன்

நாதனே ஓடோடி வந்து நீ காப்பாயோ


(என்னென்று....)


நிலையாத பொருளெலாம் நிலையென்று நம்பியே

நெஞ்சமும் தடுமாறும் நிலையதும் போகுமோ


அறமிலா செயலாலே அழிவையும் தேடியே

அலைந்து கெட்டொழிதலும் அகலுமோ இனியுமே


(என்னென்று...)


உருகியே தினம்பாடி உம்மையே போற்றிட

ஊழ்வினை நீக்கி நீ நலவளம் அருள்வையோ

உமையாளின் மறுபாதி உலகாளும் சுபஜோதி

உற்றவன் வேண்டினேன் உவந்தருள் புரிவையோ


(என்னென்று....).