Sunday 28 June 2020

ஹர ஹர சங்கர... ஜய ஜய சங்கர.

ஹரஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி மடேச்வர பாலயமாம்
குருபதி சுந்தர குருசசி சேகர
வாஞ்சித தாயக ரக்ஷமாம்

அடிமுடி காணாக் கண்டனி னுருவினில்
குஞ்சித சங்கரனே!
வடிவுடை சாந்தம் சங்கடம் போக்கிடும்
சசிசேகர குருநீயே!
(1)

படர்தரு இருளில் பரிதியு மாகியெம்
பழவினை போக்கிடுவாய்!
சுடர்தரு அமுதே சுந்தர வடிவே
சுகமுடன் வாழ்வருள்வாய்!
(2)

ஜதிதனி லேத்தும் பத்தியிற் பாடும்
துதியிதை ஏற்றருள்வாய்!
மதிமுக மங்கள மஞ்சுள வரதா
மதிதனை தந்திடுவாய்!
(3)

வருவினை கடந்து குருவுனைக் கண்டிட
வரமதும் அருளிடுவாய்!
அருளதன் பயனால் குலமதும் ஓங்கிட
திருவருள் புரிந்திடுவாய்!
(4)

அருதிரு மருகா திருமகள் புதல்வா
சன்னதி நாடிடுவோம்!
குருவவுன தருளால் குவலயம் செழிக்க
குருப்புகழ் பாடிடுவோம்!
(5)

குருபர னுந்தன் திருவடி சரணம்
பவபயம் அகற்றிடுமே!
திருவடி நிழலும் தினப்படி தொழவும்
குருவருள் வேண்டினமே!
(6)

செகமிது விளங்க செகத்குரு நின்துணை
நித்தமும் வேண்டுகிறோம்!
செகவுற வெல்லாம் விளங்கிட வேண்டி
துதியிதைப் பாடுகிறோம்!
(7)

சந்திர மௌளி திரிபுர சுந்தரி
கருணையின் ஓருருவாய்
சந்திர சேகர குருபர னேயெமைக்
காத்தருள் புரிந்திடுவாய்!
(8)

ஹரஹர சங்கர ஜயஜய சங்கர
காஞ்சி மடேச்வர பாலயமாம்
குருபதி சுந்தர குருசசி சேகர
வாஞ்சித தாயக ரக்ஷமாம்




#ஸ்ரீகுருகானம்
#நாமநாதம்

சம்போ சங்கர கௌரீசா
சாம்ப சதாசிவ பரமேசா
சற்குரு சங்கர சர்வக்ஞா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

காஞ்சீ சங்கர சதாசிவா
கற்பக வத்ஸல சிவரூபா
வாஞ்சி தாயக பதிநேயா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

சம்பூ சங்கரீ தவரூபா
சங்கட சம்ஹர குருதேவா
ப்ரபு ப்ராணபதி ஜகந்நாதா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

ஆதி மூலமே அவதூதா
அம்பல மேவிடும் மறைநாதா
அனாத ரக்ஷக சதுர்வேதா
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

அண்டம் காத்திடும் அதிரூபா
அவனியர் போற்றும் அமுதீசா
சாந்த ஸ்வரூபா ப்ரபோபதே
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

ஆரண அரசே வருவீரே
ஆதி சங்கரனே அருள்வீரே
அதிகுண முர்த்தி அவிநாசீ
சரணம் சரணம் குருநாதா

ஜய ஜய சங்கர தயாபரா
ஜய குரு நாதா க்ருபாகரா

மஹா தேவ ஸ்ரீ குருநாதா
மாத்ரு பூதனே மஹாகுணா
மண்டல குலபதி மதிசூடா
சரணம் சரணம் குருநாதா


Tuesday 23 June 2020

கலியுக வரதன்..

கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்
காட்சியளிப்பது பழனியிலே (கலியுக)

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன் (கலியுக)

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய் வந்தார்
கார்த்திகைப் பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தார்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார் ... !!!
(கலியுக)

காமகோடி பீடந்தனில்

ஜய ஜய சங்கரா…. ஹர ஹர சங்கரா….

ஸ்ரீகுருகானம்

(ஆயற்பாடி மாளிகையில் மெட்டில்….)

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ
அவர் கருணைமிகு காந்தியினை கண்டவர்க்கு குறையுமில்லை
வாழ்விளங்க தரிசனமும் கண்டீரோ
வாழ்விளங்க தரிசனமும் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

ஏலமுத்து மாலையுடன் சந்தனமும் சார்த்திக்கொண்டு
ஆலவாயன் அமர்ந்திருக்கக் கண்டீரோ
ஏலமுத்து மாலையுடன் சந்தனமும் சார்த்திக்கொண்டு
ஆலவாயன் அமர்ந்திருக்கக் கண்டீரோ

அந்த சன்னதியில் கூடியவர் சங்கடங்கள் ஓடிவிடும்
சந்ததமும் ஒளிவிளங்கக் கண்டீரோ
சந்ததமும் ஒளிவிளங்கக் கண்டீரோ


காமகோடி பீடந்
காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

நாதவொலி கூட்டி அங்கு நான்மறையும் ஓதிடவே
பேதமெல்லாம் மறைவதையும் கண்டீரோ
நாதவொலி கூட்டி அங்கு நான்மறையும் ஓதிடவே
பேதமெல்லாம் மறைவதையும் கண்டீரோ

அவர் மோனநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்க
காண்பவர்க்கும் அருள்வதையும் கண்டீரோ
காண்பவர்க்கும் அருள்வதையும் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ

மன்னனவன் வாய்திறந்தால் மண்டலமும் மகிழ்ந்திருக்கும்
மங்களத்தின் மதிவதனம் கண்டீரோ
மன்னனவன் வாய்திறந்தால் மண்டலமும் மகிழ்ந்திருக்கும்
மங்களத்தின் மதிவதனம் கண்டீரோ

அவர் பொன்னழகைக் கண்டவர்க்குள் பேதமெல்லாம் நீங்கிவிடும்
மகிமைதனைச் சன்னதியில் கண்டீரோ
மகிமைதனைச் சன்னதியில் கண்டீரோ

காமகோடி பீடந்தனில் காஞ்சியிலே சன்னதியில்
சாந்தரூபன் தரிசனமும் கண்டீரோ – ஜகத்குரு
சங்கரனின் தரிசனமும் கண்டீரோ!

எப்படிப் பாடினரோ

ஸ்ரீ ஜெயேந்த்ர பெரியவா அருளிய குரு வந்தன ஸாஹித்யம்

எப்படிப் பாடினரோ - குரு நாதனை  அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன் குருவே

தோடகரும் பத்மபாதரும் சுரேஸ்வராச்சார்யரும் ஹஸ்தாகமச் சார்யரும் சங்கர குருநாதனை

காலடியில் உதித்து கால்நடையாய் நடந்து
காசிவரை காமகோடி பீடமமைத்து,
வேற்றுமையில் ஒற்றுமை சொன்ன வேதாந்த வித்தகரை, வேதனைகளை தீர்த்து வைக்கும் சத்குருநாதனை

சிவம் சுபம்.

விழி கிடைக்குமா

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா

அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா (விழி )

கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால்
உனக்கேன்றே உனக்காக எனை ஆக்குவேன்
நினைக்காத துன்பம் பல எனை வந்து சேரும் போது
நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா (விழி)

நங்கூரம் போல் குருநாதன் கடை விழி இருக்க இந்த
சம்சார புயல் கண்டு மனம் அஞ்சுமா
நிஜமான அன்பு வைத்து எனதெல்லாம் அடியில் வைத்து
உன் விழியோர படகில் எனக்கிடம் கிடைக்குமா ( விழி)

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ அக்ஷரமாலா

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ அக்ஷரமாலா :

ஜய ஜய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

அனாத ரக்ஷக ந்ருஸிம்ஹ
ஆபத்பாந்தவ ந்ருஸிம்ஹ

இஷ்டார்த்த ப்ரத ந்ருஸிம்ஹ
ஈஷ்பரேஷ ந்ருஸிம்ஹ

உக்ர ஸ்வரூப ந்ருஸிம்ஹ
ஊர்த்வா பாஹூ ந்ருஸிம்ஹ

எல்லா ரூப ந்ருஸிம்ஹ
ஏகாந்த மூர்த்தே ந்ருஸிம்ஹ

ஐஸ்வர்ய ப்ரத ந்ருஸிம்ஹ
ஒளிரும் ஜ்யோதிர் ந்ருஸிம்ஹ

ஓங்கார ரூப ந்ருஸிம்ஹ
ஔஷத நாம ந்ருஸிம்ஹ

அம்பர வாஸ ந்ருஸிம்ஹ
காம ஜனக ந்ருஸிம்ஹ

கிரீடதாரி ந்ருஸிம்ஹ
ககபதி வாஸன ந்ருஸிம்ஹ

கதாதரனே ந்ருஸிம்ஹ
கர்ப்ப நிர்பேதந ந்ருஸிம்ஹ

கிரிதர வாஸ ந்ருஸிம்ஹ
கௌதம பூஜித ந்ருஸிம்ஹ

கடிகாசல ஸ்ரீ ந்ருஸிம்ஹ
ஸதுர் புஜனே ந்ருஸிம்ஹ

ஸதுரா யுத்தர ந்ருஸிம்ஹ
ஜ்யோதி ஸ்வரூப ந்ருஸிம்ஹ

தந்தே தாயியு ந்ருஸிம்ஹ
த்ரிநேத்ர தாரி ந்ருஸிம்ஹ

தநுஜா மர்த்தன ந்ருஸிம்ஹ
தீனநாத ந்ருஸிம்ஹ

துஃக நிவாரக ந்ருஸிம்ஹ
தேவாதி தேவ ந்ருஸிம்ஹ

ஜ்ஞான ப்ரதனே ந்ருஸிம்ஹ
நரஹரி ரூப ந்ருஸிம்ஹ

நர நாராயண ந்ருஸிம்ஹ
நித்யானந்த ந்ருஸிம்ஹ

நாம கிரீஷ ந்ருஸிம்ஹ
நாராயண ஹரி ந்ருஸிம்ஹ

பங்கஜானன ந்ருஸிம்ஹ
பாண்டுரங்க ந்ருஸிம்ஹ

ப்ரஹலாத வரத ந்ருஸிம்ஹ
பிநாகதாரி ந்ருஸிம்ஹ

புராண புருஷ ந்ருஸிம்ஹ
பவபய ஹரண ந்ருஸிம்ஹ

பக்த ஜன ப்ரிய ந்ருஸிம்ஹ
பக்தோத்தார ந்ருஸிம்ஹ

பக்தானுக்ரஹ ந்ருஸிம்ஹ
பக்த ரக்ஷக ந்ருஸிம்ஹ

முனி ஜன ஸேவித ந்ருஸிம்ஹ
ம்ருக ரூப தாரி ந்ருஸிம்ஹ

யக்ஞ புருஷ ந்ருஸிம்ஹ
ரங்கநாத ந்ருஸிம்ஹ

லக்ஷ்மீ ரமணா ந்ருஸிம்ஹ
வங்கி புரீஷ ந்ருஸிம்ஹ

ஸாந்த மூர்த்தி ந்ருஸிம்ஹ
ஷட்வர்க்க தாரி ந்ருஸிம்ஹ

ஸர்வ மங்கள ந்ருஸிம்ஹ
ஸித்தி புருஷ ந்ருஸிம்ஹ

பானக ப்ரிய ந்ருஸிம்ஹ
பங்கஜ நயன ந்ருஸிம்ஹ

ஸங்கட ஹர ந்ருஸிம்ஹ
ஸாளக்ராம ந்ருஸிம்ஹ

ஹரி நாராயண ந்ருஸிம்ஹ
க்ஷேமகாரி ந்ருஸிம்ஹ

ஜய ஜய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ

ஜய ஜய மங்கள ந்ருஸிம்ஹ
ஜய ஸுப மங்கள ந்ருஸிம்ஹ!

மகாலட்சுமி ஸ்தோத்திரம்

அபூர்வமான மகாலட்சுமி ஸ்தோத்திரம்

இது பழையக் கால புத்தகம் ஒன்றினில் ( புத்தகத்தின் பெயர் : தர்ம வர்த்தனீ ) , "ஸ்ரீ திரிபுரா ரஹஸயம்"  என்ற கதையில் , கிளை கதையாக வரும் ஒரு சுலோகம் .

தேவர்கள் ஸ்ரீயாகிய மகாலக்ஷ்மியிடம் பிரார்த்தனை செய்த சுலோகம் இது. இந்த ஸ்லோகத்தை வெள்ளிகிழமைகளில் சொல்லி பூஜை செய்பவர்களுக்கு , ஒப்பற்ற செல்வம் உண்டாகும் என்று தேவர்களிடம் ஸ்ரீ தேவி கூறி அருளினாள்.

1 நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை பத்மாயை ஸததம் நம /
   நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம //

2 த்வம் ஸாக்ஷாத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா /
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ //

3 பரமானந்ததா அபாங்கி ஹ்ருத சம்ஸ்ருத்த துர்கதி : /
  அருணா நந்தினீ  லக்ஷ்மீ :  மஹாலக்ஷ்மீ : திரிசக்திகா //

4  ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா /
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி : //

5 . ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி /
ரமா ரக்ஷ்க்ஷாகரீ   ரம்யா ரமணீ மண்டலோத்தமா //

ஸ்ரீ மகாலட்சுமி தாயாரின் திருவடிகள் துதிப்போம் ! வளங்கள் பெறுவோம்

வருவாய், வருவாய், வருவாய் -- கண்ணா

கண்ணன் பாடல்கள் கண்ணன் அடியார்
வருவாய் வருவாய் அம்மா..... ராகம்

வருவாய், வருவாய், வருவாய் -- கண்ணா
(வருவாய், வருவாய், வருவாய்.)

உருவாய் அறிவில் ஒளிர்வாய் -- கண்ணா
உயிரின்னமுதாய்ப் பொழிவாய் -- கண்ணா
கருவாய் என்னுள் வளர்வாய் -- கண்ணா
கமலத் திருவோ டிணைவாய் -- கண்ணா (வருவாய்......)

இணைவாய் எனதாவியிலே -- கண்ணா
இதயத் தினிலே யமர்வாய் -- கண்ணா
கணைவா யசுரர் தலைகள் -- சிதறக்
கடையூ ழியிலே படையோ டெழுவாய்!
(வருவாய்......)

எழுவாய் கடல்மீ தினிலே -- எழுமோர்
இரவிக் கிணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே -- கண்ணா,
துணையே, அமரர் தொழும்வா னவனே!
(வருவாய்......)

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

ஜகம் புகழும் புண்ய கதை

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே
இந்தக் கதை கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே
இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்
அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை
கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்
கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வன்

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை
ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே
காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே
கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே
தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்
சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்
சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
காதலினால் இருவர் கண்களும் கலந்தன
கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்
அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்
அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்
அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு
மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே
மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே
மகர தோரணத்தால் அலங்கரித்தாரே

மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி
மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்
வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும் மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்
மரண மூர்ச்சை அடைந்த பின்னர்
ராமனையும் அழைக்கச் செய்தாள்
தந்தையுனை வனம் போகச் சொல்லி
தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார் என்றாள்

சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்
சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்
விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த
தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே
மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு
கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே
இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்
அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே
அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே
அண்ணலும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்
கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்
அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்
அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்
ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை
ராமபிரான் மீது மையல் கொண்டாள்

கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை
மானபங்கம் செய்து விரட்டி விட்டான்
தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்

தங்கையின் போதையால் தசகண்ட ராவணன்
ஜானகி தேவியை சிறையெடுத்தான்
நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி
தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்
ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்
வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்
ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்
அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்
ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்

கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்
வானர சேனையுடன் சென்றான்

விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்
வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்
கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்
அரசுரிமை கொண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்
செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே
ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜ மப்ரமேயம்
ஸீதாபதிம் ரகு குலான்வய ரத்ன தீபம் |

ஆஜானு பாஹும் அரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர வினாசகரம் நமாமி ||

ஆத்மநாதனே சுவாமி சந்த்ரசேகரா




ஹரிஹராத்மஜம்..மெட்டு

ஆத்மநாதனே சுவாமி  சந்த்ரசேகரா
லோகபூஜ்யனே சசி சேகரேந்திரா
காஞ்சிவாஸனே சுவாமி சாந்தரூபனே
யோகராஜனே சசி சேகரேந்திரா

ப்ரம்ஹமூர்த்தியே சுவாமி சஙக‌ராத்மனே
ஸத்ய‌நாதனே சசிசேகரேந்திரா
முக்திதாயகா சுவாமி மந்த்ரநாயகா
சக்திசேவிதா சசி சேகரேந்திரா

சாந்தரூபனே சுவாமி நாதபூதியே
வேதஸ்ரேயசே சசிசேகரேந்திரா
வாஞ்சிதாயகா சுவாமி காஞ்சிநாயகா
ஹரிக்ருபாகரா சசி சேகரேந்திரா

பதமபாதனே சுவாமி ப்ரணவரூபனே
சாக்ஷிபூதனே சசிசேகரேந்திரா
திவ்ய நாமமே சுவாமி சந்த்ரசேகரா
ச‌ரணம் சர‌ணமே சசிசேகரேந்திரா


அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா

அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா
ஆறு படை வீடுடையாய் வா வா முருகா
இன்பமய ஜ்யோதியே நீ வா வா முருகா
ஈசன் உமை பாலகனே வா வா முருகா (2)
உரக நாபன் மருகனே நீ வா வா முருகா
ஊமைக்கருள் புரிந்தவனே வா வா முருகா
எட்டுக்குடி வேலவனே வா வா முருகா
ஏறுமயில் ஏறியே நீ வா வா முருகா (2)
ஐங்கரனுக்கிளையவனே வா வா முருகா
அகில லோக நாயகனே வா வா முருகா
ஓடி வா நீ ஓடி வா நீ வா வா முருகா
ஆடி வா நீ ஆடி வா நீ வா வா முருகா (2)
ஒய்யாரி வள்ளி லோலா வா வா முருகா
ஓங்கார தத்துவமே வா வா முருகா (2)
ஔவைக்குபதேசித்தவா வா வா முருகா
அன்னை உமை பாலகனே வா வா முருகா
ஆடி வா நீ ஆடி வா நீ வா வா முருகா
அம்மையப்பன் பாலகனே வா வா முருகா (2)



வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல்

என்னப்பனே என் ஐயனே கந்தப்பனே கந்த காருண்யனே (என்)

வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா  வேல் வேல்

பன்னிருகை வேலவனே (2) கன்னி வள்ளி மணவாளனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா  வேல் வேல்

பார்வதியாள் பாலகனே (2)  பக்தர்களுக்கு அனுகூலனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா  வேல் வேல்

எட்டுக்குடி வேலவனே (2) சுட்ட பழம் தந்தவனே
அவ்வைக்குச் சுட்ட பழம் தந்தவனே
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா  வேல் வேல்

கால்களில் பொற்சிலம்பு முருகன் கைகளில் பொற்சரங்கள் (2)
கல் கல் கல் என வருவான்
வேல் வேல் வேல் வேல் வேல்முருகா வேல், வேல்முருகா மாப்பழனி
வேல்முருகா  வேல் வேல்

ஓம் ஜய ஜய ஜய சக்தி

ஓம் ஜய ஜய ஜய சக்தி ஓம் ஸ்ரீ ஜய ஜய ஜய சக்தி
ஜய ஜய என தினம் பாடிப்பணிந்தோம் (2) ஜகமெங்கும் அமைதியைத்தா (ஓம் ஸ்ரீ) (2)

த்ருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்கத் தேவையெல்லாம் அடைய அம்மா
பக்திபெருகிடப் பாடி உருகிடப் (2) பணிப்பாய் அன்பிலெமை (ஓம் ஸ்ரீ)

இரண்டுகள் போக மூன்றுகள் அகல ஈஷ்வரி வரம் அருள்வாய்
அம்மம்மா ஈஷ்வரி வரம் அருள்வாய்
கரம் குவித்தோம் இனி காலை விடோமடி  (2) கருணையுடன் அணைப்பாய் (ஓம் ஸ்ரீ) (ஓம் ஜய)

காசினி எங்கும் வேற்றுமை போகக் கருத்தினில் அன்பருள்வாய்
அம்மம்மா கருத்தினில் அன்பருள்வாய்
தேசுடன் வாழக் காட்டடி காக்ஷி (2) தேவியுன் அடைக்கலமே (ஓம் ஸ்ரீ) (ஓம் ஜய)

நமஸ்காரம் இருவினை கருத்தினில் ஞான நல்லொளி தீபம் வைத்து
ஞான நல்லொளி தீபம் வைத்து
நமஸ்காரம் செய்து ஹாரதி எடுத்தோம் (2) ஞாலத்திற்கமைதியைத்தா (ஓம் ஸ்ரீ) (ஓம் ஜய)

ஓம் கணபதி ஸாயி ஷண்முக நாதா ஓம் த்ரிகுணாதீதா க்ருஷ்ணா
ஓம் த்ரிகுணாதீத கிருஷ்ணா
ஓம் ஸ்ரீ ராம மஹாதேவ ஷம்போ (2) ஓம் ஜய ஜகஜ்ஜனனி (ஓம் ஸ்ரீ) (ஓம் ஜய)







பிள்ளையார் பிள்ளையார்


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் (2)


ஆற்றங்கரை மீதிலே அரச மரத்தின்  நிழலிலே

வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் (பிள்ளையார்)


யானைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்

பானை வயிறு படைத்தவர் பக்தர் குறை தீர்த்தவர்

மஞ்சளிலே செய்யினும் மண்ணிலே செய்யினும்

ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்


ஓம் நம: ஷிவாயவென்ற ஐந்தெழுத்து மந்திரத்தை

நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஓம் நம: ஷிவாயவென்ற ஐந்தெழுத்து மந்திரத்தை

நினைவில் நிறுத்தும் பிள்ளையார்


ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்

நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)


கலியுகத்தில் விந்தையைக் காணவேண்டி அனுதினம்

எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்

ஜய கணேஷ ஜய கணேஷ ஜய கணேஷ பாஹிமாம்

ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ரக்ஷமாம்




ஓடி வாவா கண்ணா


ஓடி வாவா கண்ணா
ஆடி வாவா
ஓங்கார நாதக்குழல் ஊதிக்கொண்டென் அருகில் (ஓடி)


உன் திரு நாமங்கள் ஓதி வந்தேனே ஓயாமல்
உன் பெருமை புகழ்ந்தேனே – உன்னடியார் சேவை
புரிந்தேனே – உனதடி மலரினைப் பணிந்தேனே (ஓடி)

கருணை என் மேல் பொழிவாய் கமலக்கண்ணா
காமகோடி ஸுந்தரனே கார்முகில் வண்ணா
கனக நிற சேலை இடையோனே கான மயில்
தோகையணி முடியோனே (ஓடி)

அன்பர் குலம் காக்கத் துணிந்தவனே
ஆடும் மணி குண்டலங்கள் அணிந்தவனே
அச்யுதனே இங்கு வருவாயோ
அற்புதக் காட்சி எனக்குத் தருவாயோ (ஓடி)

பொன்னடியில் தங்கச் சிலம்போசை
பொன்னரையில் தங்கரணால் கிண் கிணி ஓசை
புன்னகை திருவாயில் குழலோசை
பரிபூரணமாய்த் தந்தருள்வாய் எங்கள் ஆசை (ஓடி)

நடந்தாய் வாழி காவேரி

நடந்தாய் வாழி காவேரி நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க

அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய்
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் இந்த
அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
அடர்ந்த மலைத்தொடரில் அவதரித்தாய் இந்த
அழகுத் தமிழ் நிலத்தை அலங்கரித்தாய்
நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய்
நடந்த உன் வழியெல்லாம் நலமளித்தாய்
நங்கையர் உனை வணங்கவும் மலர்கள்
கொஞ்சும் சோலைகள் நெருங்கவும்
நங்கையர் உனை வணங்கவும் மலர்கள்
கொஞ்சும் சோலைகள் நெருங்கவும்
இன்ப யாழிசை முழங்கவும் செவியில்
செந்தமிழ்த் தேன் வழங்கவும்
இன்ப யாழிசை முழங்கவும் செவியில்
செந்தமிழ்த் தேன் வழங்கவும்
அசைந்து வளைந்து நெளிந்து தொடர்ந்து
அலைகடலெனுமொரு மணமகன் துணை பெறவே

நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி

நடந்தாய் வாழி காவேரி நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி

உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
உணவளிக்கும் உழவர்க்கெல்லாம் கண்ணாக பண்பு
உயர்ந்த தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாக
புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக
புலவரெல்லாம் பாராட்டும் பொன்னாக அன்பு
பொங்கிவரும் காவிரியே வாழியாவே
பொங்கிவரும் காவிரியே வாழியாவே

நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க
நடந்தாய் வாழி காவேரி

Thursday 4 June 2020

ரோஜா மலரே ராஜகுமாரி

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா
வருவதும் சரிதானா உறவும் முறைதானா

வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ
வேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ

வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ (2)

மன்னவர் நாடும் மணிமுடியும்  மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும்  குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ  (2) -- (ரோஜா மலரே)

பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன்

ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழை என்றாலும் ராஜகுமாரன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ


Monday 1 June 2020

சங்கர கும்மி


சங்கரன் நாமமும் சொல்கையிலே - எங்கள்
சங்கடம் நீங்குது உண்மையிலே
சொந்தங்கள் யாவரும் கூடுகையில் - எந்தன்
நெஞ்சமும் பாடுது பக்தியிலே

சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ர சேகரன் நாமமும் சொல்கையிலே!

தங்க ரதம் அதை காண்கையிலே....
காஞ்சி தங்கரதமதைக் காண்கையிலே - எங்கள்
நெஞ்சமும் ஏங்குது பக்தியிலே
சொக்கத் தங்கமுந்தன் கருணையிலே எங்கள்
வாழ்வும் மிளிருது மகிழ்வினிலே

சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ர சேகரன் நாமமும் சொல்கையிலே!

சொந்தங்கள் யாவரும் கூடுகையில் - எந்தன்
நெஞ்சமும் பாடுது பக்தியிலே
பூப்பந்தலும் கூட தோரணமும் - உந்தன்
மகிமை விளங்கிட ஆடிடுதே

சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ர சேகரன் நாமமும் சொல்கையிலே!

பாரதம் முழுவதும் நடைநடந்த - உந்தன்
பாதங்கள் கண்டிட ஏங்கிடுதே
பாதக் கமலத்தின் நிழலதிலே - மனம்
மையம் கொண்டிடவும் ஏங்கிடுதே

சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ரசேகரன் நாமமும் சொல்கையிலே!

மெத்தகு வாழ்விதும் உயர்ந்திடுமே - உந்தன்
சந்ததம் நினைவினில் தங்கிடவே
தரும நியாயங்கள் போற்றிடவே - எங்கள்
வாழ்வினில் உயர்வதும் கூடிடுதே

சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ரசேகரன் நாமமும் சொல்கையிலே!

காஞ்சித் தலமதை நாடிடவே - எங்கள்
வாஞ்சியுன் அருளதை பெற்றிடவே
சாந்தஸ்வரூபி உன் தரிசனமும் கண்டு
சாஸ்வத பதவரம் தந்தருள்வாய்!

சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ரசேகரன் நாமமும் சொல்கையிலே!

சங்கரன் நாமமும் சொல்கையிலே - எங்கள்
சங்கடம் நீங்குது உண்மையிலே
சொந்தங்கள் யாவரும் கூடுகையில் - எந்தன்
நெஞ்சமும் பாடுது பக்தியிலே

சங்கரன்... சசி சேகரன்...
சந்த்ர சேகரன் நாமமும் சொல்கையிலே!