Tuesday 23 June 2020

பிள்ளையார் பிள்ளையார்


பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் (2)


ஆற்றங்கரை மீதிலே அரச மரத்தின்  நிழலிலே

வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் (பிள்ளையார்)


யானைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்

பானை வயிறு படைத்தவர் பக்தர் குறை தீர்த்தவர்

மஞ்சளிலே செய்யினும் மண்ணிலே செய்யினும்

ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்


ஓம் நம: ஷிவாயவென்ற ஐந்தெழுத்து மந்திரத்தை

நெஞ்சில் நாட்டும் பிள்ளையார்

ஓம் நம: ஷிவாயவென்ற ஐந்தெழுத்து மந்திரத்தை

நினைவில் நிறுத்தும் பிள்ளையார்


ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்

நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார் (பிள்ளையார்)


கலியுகத்தில் விந்தையைக் காணவேண்டி அனுதினம்

எலியின் மீது ஏறியே இஷ்டம் போலச் சுற்றுவார்

ஜய கணேஷ ஜய கணேஷ ஜய கணேஷ பாஹிமாம்

ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ஸ்ரீ கணேஷ ரக்ஷமாம்




No comments:

Post a Comment