Thursday 4 March 2021

முருகன் பஜன்


ஈசனோடு பேசியது போதுமே

என்னோடும் பேசு சாமிநாதா

ஈசனோடு பேசியது போதுமே
என்னோடும் பேசுசாமி நாதனே
ஆசையோடு தமிழெடுத்துப் பாடினேன்
ஐயாஉன் திருவடியை நாடினேன்

கண்சீறும் பொறியூறி பிறந்தவா
கமலத்தில் அன்று நீயும் தவழ்ந்தவா
தண்ணீரில் சளியுனக்குப் பிடிக்குமே
சரவணத்துப் பொய்கைவிட்டு எழுந்துவா

கடலோரம் நிற்பவனே சண்முகா
கடல் நீரால் உடல் அரிக்கும் அல்லவா
நடமாடும் மயிலேறி இங்குவா
நல்ல மனக் கோயிலுண்டு தங்கவா

குன்றத்திலே கல்யாணம் ஆனதால்
குவலயத்தை நீமறத்தால் நியாயமா
குன்றத்தையும் விட்டிறங்கி ஓடிவா
கொஞ்சு தமிழ் இசைகேட்டு ஆடிவா

பன்னிரண்டு கண்களாடுந் தெய்வமே
என்னை மட்டும் காணமனம் இல்லையோ
உன்னை விட்டு யாரை இனி நம்புவேன்
சண்முகனே என்னுடனே வம்புஏன்

ஒன்றிரண்டு விழியேனும் திறந்திடு
ஓரவிழிப் பார்வையேனும் புரிந்திடு
என்றுமுனை நம்பிநின்றேன் வரங்கொடு
ஏற்றமுடன் யான் வாழ வரங்கொடு.


தினம்தினம் முருகனையே நினை மனமே-நம்

கஷ்டங்களைப்போக்கிடுவான் நம்பு மனமே


பக்தியுடன் பாட வேண்டும் நினை மனமே

பரவசமாய் ஆட வேண்டும் நினை மனமே


பழனிமலை பாலனையே நினை மனமே

சவாமிமலை நாதனையே நினை மனமே

எட்டுக்குடி வேலனையே நினை மனமே

சிக்கல் சிங்காரனையே நினை மனமே (தினம்)


திருப்போரூர் குமரனையே நினை மனமே

திருச்செந்தூர் முருகனையே நினை மனமே

திருத்தணிகை ஈசனையே நினைமனமே

வள்ளிமலை வாசனையே நினைமனமே (தினம்)

______________




Velava Velava Vel Muruga Vaa Vaa


Velava Velava Vel Muruga Vaa Vaa 

Vel Muruga Vaa Vaa Vadi Vel Muruga Vaa Vaa

Velava Shanmukha Muruga Muruga


Valli Manavala Kunjari Manala

Deva Kunjari Manala

Vanna Mayil Vahana Muruga Muruga


Sooradhi Soora Subramanya Deva

Deva Subramanya Deva

Shanmukha Saravana Muruga Muruga

__________

No comments:

Post a Comment