Thursday 25 March 2021

என்னகவி..ராகம்

என்ன தமிழ் பாடினாலும்

எந்தன் மனம் நிறையவில்லை

ஈடில்லா தெய்வம் காஞ்சி

சங்கரன் வடிவில் உன்னை

(என்ன தமிழ்....)


நீருள்ள வரைதனிலே பூ மணக்கும் - தேவா

நீயிருந்து காத்திடவே புவி என்றும் பிழைத்திருக்கும்

(என்ன தமிழ்...)


கதியென உனையன்றி ஏதுண்டு தரணியிலே

அற்புதம் அருள்வாய் நீயே - விஜயேந்திரரே

பக்தரை காத்தருள்வாயே

(கதியென...)


வடிவான நங்கையுடனே நாதியனாம் சிவப்பொருளாய்

ஞாலமிதை காப்பாய் நீயே - ஜகதீஸ்வரரே

நேயமொடு அருள்வாய் நீயே

(வடிவான...)


பொற்பதமும் பற்றித் தொழுதேன்

புனிதமும் பெறவேண்டி

மங்களம் அருள்வாய் நீயே - சர்வேஸ்வரரே

என் குலம் காத்தருள்வாய்

(என்ன தமிழ் ...)


No comments:

Post a Comment