ராகம்: காம்போதி
தாளம்: ஆதி
பல்லவி:
வழிகாட்டும் குலதெய்வம் நீயல்லவோ – காஞ்சி
தலம்மேவும் ஸ்ரீ சந்த்ர சேகரா – புவிதனில்
(வழி….)
அநுபல்லவி:
எழில்கொஞ்சும் சிவகாஞ்சி குருபீட சங்கரனே
என்னாளும் மறவேனே எனையாளும் ஈசனே
(வழி…)
சரணம்:
அன்பாலே அடியார்க்கும் அம்மையப்ப குருவாகி
அருகாக அறஞ்சொல்லி ஆதாரப் பொருளாகி
மறைதந்த தருமங்கள் நியாயங்கள் திறந்தந்து
தயவுடனே தரணியரின் நலங்காக்க ஆட்கொண்டு
(வழி…)
No comments:
Post a Comment