Saturday 14 August 2021

குருகானம்..

 


ராகம்: காம்போதி

தாளம்: ஆதி


பல்லவி:


வழிகாட்டும் குலதெய்வம் நீயல்லவோ – காஞ்சி 

தலம்மேவும் ஸ்ரீ சந்த்ர சேகரா – புவிதனில்

(வழி….) 


அநுபல்லவி:


எழில்கொஞ்சும் சிவகாஞ்சி குருபீட சங்கரனே 

என்னாளும் மறவேனே எனையாளும் ஈசனே 

(வழி…) 


சரணம்:


அன்பாலே அடியார்க்கும் அம்மையப்ப குருவாகி 

அருகாக அறஞ்சொல்லி ஆதாரப் பொருளாகி 

மறைதந்த தருமங்கள் நியாயங்கள் திறந்தந்து 

தயவுடனே தரணியரின் நலங்காக்க ஆட்கொண்டு 

(வழி…) 


No comments:

Post a Comment