அருள் புரிவாய் எந்தன் குருவே !!
ஆண்டருள்வாயே,
ஆதரிப்பாய் எனையே
அருள் புரிவாய்...
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்,
உந்தன் பதமலரதனை
எந்தன் மனம் நாடிடுதே
அருள் புரிவாய் ...
செகம் முழுதும் போற்றும் ஜகத்குரு சங்கரனே
சேய் எனைக் காத்தருள தாமதமும் வேண்டாமே
எண்ணிலும் எழுத்திலும் நிறைபவனும் நீயே
எம்குல தெய்வமாய் ஏழையெனைக் காத்து ...
அருள் புரிவாய் எந்தன் குருவே ...
கருணை உளம் கொண்ட கற்பகத் தரு நீயே
காமகோடீ வரமாய் காப்பவனும் நீயே
கணப் பொழுதும் எனைத் தவியாமல் காத்திடும்
கண்கண்ட தெய்வமே காமாக்ஷீ திருவுருவே
அருள் புரிவாய் எந்தன் குருவே ...
சங்கரம் போற்றி.
No comments:
Post a Comment