Saturday 12 December 2020

என்னகவி.

 




என்ன கவி பாடினாலும் 

எந்தன் மனம் அடங்கவில்லை

ஈடிணை உனக்குமுண்டோ…  சசிசேகரா 

(என்ன கவி பாடினாலும்) 


தன்னையும் அறியவில்லை 

தன்னிலே அறிவுமில்லை 

எந்தையுனை அழைப்பதற்கோ 

என்றுமே மறக்கவில்லை

கந்தை எனை தூய்ப்பையோ 


(என்ன கவி பாடினாலும்) 


அண்டுந்துயர் துடைக்க 

அருகிலினில் யாருமில்லை

அம்பிகையே அழைத்தேன் 

அடியனைக் காப்பதற்கே… 

இக்கணத்தில் நீ அன்றி 

வேறேதும் துணையுமில்லை

இக்கணத்தில் நீ அன்றி 

வேறேதும் துணையுமில்லை 


பிச்சையுண்டோ எனக்கு

உன்னை நான் விடுவதில்லை

சுபிட்சையுண்டோ எனக்கு

உன்னையன்றி வழியுமில்லை 


என்ன கவி பாடினாலும் எந்தன் மனம் அடங்கவில்லை

ஈடிணை உனக்குமுண்டோ…  சசிசேகரா 

(என்ன கவி பாடினாலும்) 


பெரியவா....!


No comments:

Post a Comment