Tuesday 12 January 2021

மாடு மேய்க்கும் கண்ணே நீ

 

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்

அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே

சரணம்:

காய்ச்சின பாலு தரேன்கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்;வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

காய்ச்சின பாலும் வேண்டாம்;கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்துஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே 
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ?கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன் 
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே 
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே) 
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே 
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்) 

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன் 
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

No comments:

Post a Comment